Tuesday, October 18, 2011

இயற்கை அழகை.

பச்சிலை சேலை கட்டி
சூரியப் பொட்டு வைத்து
அழகிய குன்றுகளாம்
சொல்லமுடியாத
அழகுதன்னை
மாராப்பு சரி செய்து
சேவகம் செய்யும்
தென்றலங்கே
மங்கை நீராட
கடலது இருக்கையிலே
சோப்பு நுரை போலே
மேகம் அது கூடுமங்கே
நிலவுப் பெண் குளிக்கையிலே
பள்ளத்தாக்கில் ஒளிந்து கொண்டு
கொஞ்சம் நான் பார்க்க வேண்டும்
..........................

1 comment:

  1. கலா, பெயருக்கேற்றார் போல் எழுதி இருக்கின்றாய்,வாழ்த்துக்கள்.

    ReplyDelete