Saturday, November 5, 2011



கிளிவுன்னுடன் பேச வேண்டும்
பூ உன்னைத் தீண்ட வேண்டும் 
பா உன்னைப் பாட வேண்டும் 
நாவினால் சுவைக்க வேண்டும் 
சினுங்களை ரசிக்க வேண்டும் 
முனகலைக் கேட்க வேண்டும் 
நடக்கையில் உன் கையுரச வேண்டும் 
சூடேற இதமதில் மிதக்க வேண்டும் 
மழையினில் உன்னுடனே 
ஒர்குடையில் வலம் வேண்டும் 
மழை நின்றாலும் அன்பதுவில் 
நனைய வேண்டும் 
இதற்கு நீ வேண்டும் 
என்னுடைய காதலியாய் 

காதலிப்பாயா காதலியே?

6 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. மழையினில் உன்னுடனே
    ஒர்குடையில் வலம் வேண்டும்
    மழை நின்றாலும் அன்பதுவில்
    நனைய வேண்டும் ella kadhalanukkum vaazhnaal asiyo ithu?

    ReplyDelete
  3. Penkalukkum intha aasai irukum avanga solla mattanga ... Enaku intha aasai iruku nan solliten mathavangalukku irukanu enaku theriyalai....

    ReplyDelete
  4. naangalum solluvom kalaanithi .nanraaka ullathu

    ReplyDelete
  5. கடற்கரை மணலிலே கால்கள்
    புதைத்து உன் மடியில் நானும்
    என் மடியில் நீயும் சாய்ந்து
    காற்று வாங்குவோம் வா

    ஒரு தேநீர் கோப்பையில்
    இருவர் எச்சிலும் கலக்க
    ஒன்றாய் தேநீர் பருகுவோம்
    அன்பாக வா

    புல்வெளியில் அமர்ந்து
    ஒருவரை ஒருவர் காதலுடன்
    அணைத்தே புகைப்படம்
    எடுத்து மகிழ்வோம் வா

    நிலவின் துணையோடு
    நாம் இருவரும் முற்றவெளியில்
    நம் கைவிரல்களை
    எண்ணிக்கொண்டே நம்
    காதல் கதை பேசிடுவோம் வா

    அந்திசாயும் நேரம் வேப்பமர
    நிழலிலே நீஎனக்கும் நான்
    உனக்கும் தந்திடும் முத்தத்திலே
    உடல் சிலிர்ப்போம் வா

    கட்டாந்தரையிலே ஒற்றை பாய்
    விரித்து ஒற்றை தலையணையில்
    நீ தலை வைத்து உறங்க
    உன் கையை என் தலையணை
    ஆக்கி விடிய விடிய
    அணைத்துக்கொண்டே
    உறங்கிடுவோம் வா
    v.m.j.gowsi......enathu padaipil onru padiththu paarungal

    ReplyDelete
  6. மிக்க சந்தோசம் கௌசி ...

    உங்கள் கவிதை மிக அருமை கவிதயாணி ...!

    ReplyDelete