Thursday, July 7, 2011

இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாணி மல்லிகை ..

வானில் மல்லிகை
வீசும் உன் புன்னகை
எங்கிலும் மரங்கள்
நிழல் கரங்களில்
நின்னை தீண்ட வரும்
பேசா பூக்களெல்லாம்
உன்னுடன் பேசிடவே
நேரம் கேட்டு நிற்கும்....

வளைந்து நெலிந்த ஆறுகளோ
குழைந்து வரும் உன்னை நீராட்ட...

அன்னையர் நிலவைகாட்டி சோறூட்ட
அன்னைபோல் நிலவே வரும் உனக்கு சோறூட்ட..

தென்றல் வரும் தேரோட்ட
மயில் வரும் இறகில் சீராட்ட
குயில்களும் உன்னை தாலாட்ட
புயல்களும் கொஞ்சி சிரிப்பூட்ட
கயல்களும் கண்ணில் நீந்தி வரும்
பிறை சந்திரன்
உன் புன்னகையில் பூத்திருக்கும்...

ஹா ஹா ஹா ஹா
யார் வரினும் போயினும்
மனிதன் நான் சுயநலவாதி
இயற்கை எழிலெல்லாம் உன்னை
தேடி நிற்க
உன்னை என் இதயத்தில்
பூட்டி வைத்து பொய் சொல்வேன்
எனக்கு தெரியவில்லை
அவர்கள் எங்கே என்று.
நல்லா தேடித் பாருங்க
பூக்களுக்குள் ஒளிந்திருக்காங்களோ
என்னவோவென்று...

இனிய தோழிக்கு
எளியன் கலாவின்
பனியின் துளிகள் போல்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

No comments:

Post a Comment