Thursday, January 28, 2010

விழிகளுக்கு தெரியாத விடியல்...!




அனுப்பப்படாத குறுஞ்செய்திகளால்
நிரம்பிக்கிடக்கிறது அலைபேசி
எழுதித் தீராத சொற்களுக்காகக்
காத்திருக்கின்றன மின்னஞ்சல்கள்
உலர்ந்து போன

முடிக்கப்படாத கவிதைகள்
கொட்டப்படாத உணர்வுகளோடு
அழுத்திக்கொண்டிருக்கும் பிரியம்
வதை முகாமென அதீதமாய் இம்சிக்கிறது
பசுவின் வலி காக்கைக்குப்
புரிய நியாயமில்லை


சின்ன சின்ன சீண்டல்களுக்கும்

செல்ல ஊடல்களுக்குமான
ஏக்கங்களையும்
வெளிப்படுத்தப்படாத

உணர்வுகளையும் ஆழ
புதைத்து வைத்திருக்கிறேன்...
இஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறேன்
எரிமலை வெடிந்து கசிந்துவிடாமல்

கண்ணீரை உள்ளிழுத்து
மௌனம் காக்கிறேன்
கொஞ்சம் கொஞ்சமாய்
வசம் இழந்துகொண்டிருக்கிறேன்...

என் நினைவுகள் உனக்கு மட்டுமல்ல
எனக்குமே வருவதில்லை...

உன் காலடி வரை வந்து
ஸ்பரிசிக்காமலே திரும்பிவிடுகின்றன
உனக்கான என் பிரியங்கள்
உன் நினைவுகள் தூரத்தில்
ரயில் தண்டவாளத்தின் அதிர்வுகளாய்
நிம்மதியிழக்கச் செய்கிறது
எப்போதும் என்னை....

உன் ஒற்றைச் சொல்லை தலையசைப்பை
புன்னகையை எதிர்நோக்கியே
என் நாட்கள் விடி(மடி)கின்றன...
விடிகின்ற பொழுதுக்காய்
 

விழிதிறந்தே காத்திருக்கிறேன்...
விடியலின் வெளிச்சமுமென்னை
பரிகசித்துப் போகிறது...! 

9 comments:

  1. கொட்டப்படாத உணர்வுகளோடு
    அழுத்திக்கொண்டிருக்கும் பிரியம்
    வதை முகாமென அதீதமாய் இம்சிக்கிறது
    பசுவின் வலி காக்கைக்குப்
    புரிய நியாயமில்லை
    wow kalai...


    இஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறேன்
    எரிமலை வெடிந்து கசிந்துவிடாமல்
    கண்ணீரை உள்ளிழுத்து
    மௌனம் காக்கிறேன்
    xcellent ah irukku pa...

    ReplyDelete
  2. //
    இஷ்டப்பட்டு கஷ்டப்படுகிறேன்
    எரிமலை வெடிந்து கசிந்துவிடாமல்
    கண்ணீரை உள்ளிழுத்து
    மௌனம் காக்கிறேன்
    //

    Arumaiya irukku....

    ReplyDelete
  3. அருமையான கவிதை மனதில் பட்டதை பட்டென தேங்காய் உடைத்தது போல சொல்லி இருப்பது பாரட்டுக்கு உரியது..எல்லா வரிகளுமே சிறப்பு அதில் வலிகளைத் தாங்கும் உலிகளாய் சில ....//பசுவின் வலி காக்கைக்குப்
    புரிய நியாயமில்லை//கண்ணீரை உள்ளிழுத்து
    மௌனம் காக்கிறேன்

    கொஞ்சம் கொஞ்சமாய்
    வசம் இழந்துகொண்டிருக்கிறேன்...//என் நாட்கள் விடி(மடி)கின்றன...//விழிதிறந்தே காத்திருக்கிறேன்...
    விடியலின் வெளிச்சமுமென்னை
    பரிகசித்துப் போகிறது...! //போன்ற சொல்லாடால்கள் சிறப்பு சேர்க்கின்றன..

    ReplyDelete
  4. விடிகின்ற பொழுதுக்காய்
    விழிதிறந்தே காத்திருக்கிறேன்...
    விடியலின் வெளிச்சமுமென்னை
    பரிகசித்துப் போகிறது...!

    "Niece lines" Friend

    ReplyDelete
  5. சிரபிப்பத்க்கு வார்தேகள் இல்லே

    ReplyDelete
  6. கண்ணீரை உள்ளிழுத்து
    மௌனம் காக்கிறேன்
    கொஞ்சம் கொஞ்சமாய்
    வசம் இழந்துகொண்டிருக்கிறேன்...

    என் நினைவுகள் உனக்கு மட்டுமல்ல
    எனக்குமே வருவதில்லை...

    superb kala

    ReplyDelete
  7. kalanidhi i didn't expect this from you.wonderful words.its shows something happens next to me. i expect more from you. keep it up. good job.

    ReplyDelete